அரியலூர்: ஒருதலை காதல் - கைகளை பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

அரியலூர்: ஒருதலை காதல் - கைகளை பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
அரியலூர்: ஒருதலை காதல் - கைகளை பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

அரியலூரில் ஒரு தலை காதலால் இளைஞர் ஒருவர் தண்ணீர் டேங்கில் ஏறி கையை பிளேடால் கிழித்து இரத்தம் செட்ட செட்ட தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன் (26) 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், பேக்கரியில் வேலைக்கு சென்று வந்த நிலையில், ஒருதலை பட்சமாக ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காதல் கை கூடாததால் மனம் உடைந்த அவர், இன்று காரைக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி பிளேடால் கைகளை கிழித்துக் கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட நின்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மேல்நிலைத் தொட்டிமேல் ஏறி அவரை ஆசுவாசப் படுத்தினர்.

பின்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன் தொட்டிமேல் ஏறி அவருக்கு உணவுகள் வழங்கிய நிலையில் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இளைஞர்கள் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com