தமிழ்நாடு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் - ஆளுநர் உத்தரவு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் - ஆளுநர் உத்தரவு
தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜயநாராயண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.