மதுரை மத்திய சிறைச்சாலையில் நெசவு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சிறைத்துறை நிர்வாகம்

மதுரை மத்திய சிறைச்சாலையில் நெசவு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சிறைத்துறை நிர்வாகம்
மதுரை மத்திய சிறைச்சாலையில் நெசவு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சிறைத்துறை நிர்வாகம்

மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள காலியாக உள்ள நெசவு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலையில் ஆண், பெண் கைதிகளுக்கு தனித்தனியாக சிறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளின் மறுவாழ்வு மற்றும் திறன் மேம்படுத்தலுக்காக சிறைச்சாலைக்குள்ளேயே பூந்தொட்டிகள் தயாரிப்பது, துணிகளை தேய்ப்பது, உணவு சமைத்து விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள நெசவு ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தமிழக அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட கைத்தறி நெசவு பயிற்சிக்கான சான்றிதழ், கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மத்திய சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com