பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு

பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு

பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு
Published on

பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர், பிக்பாஸுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கவர்ச்சியான உடை, இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதாகவும், எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

வழக்கில் தமிழக அரசு, டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தொலைக்காட்சி நிறுவனம், எண்டோமால் நிறுவனம், நடிகர் கமலஹாசன் ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருமென தெரிகிறது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com