தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு
தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள முறையீட்டில், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவும் எனவே குடமுழுக்கிற்கு தடை தேவை எனவும் முறையீட்டில் வலியறுத்தியுள்ளார்.

இதனையடுத்து வழக்கறிஞர் சரவணன் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com