‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை? 

‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை? 

‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை? 
Published on

கடன் சுமை அதிகரித்துள்ளதால் சொத்துகளை விற்கும் முயற்சியில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போலோ மருத்துவமனையை நிர்வகித்துவரும் ரெட்டி குடும்பம், நிறுவனங்கள் சார்ந்த கடன் பிரச்னையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சொத்துகளை விற்கும் முயற்சியில் அப்போலோ இறங்கியுள்ளது. சொத்துகளை விற்பதால் தற்போதுள்ள கடன் தொகையான ரூ.3000 கோடியை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.2500 கோடியாக குறைக்க அப்போலோ திட்டமிட்டுள்ளது. 

இதற்காக தங்களுக்கு சொந்தமான 13 செவிலியர் கல்லூரிகள் மற்றும் 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக முனிச் ரீ குழுமத்துடன் இணைந்து நடத்தி வந்த மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை ஹச்டிஎஃப்சி நிறுவனத்திடம்  கடந்த மாதம் அப்போலோ விற்றது. 

சொத்துகளை விற்பது மட்டுமில்லாமல் நிதியை திரட்டும் பிற வழிகளையும் அப்போலோ பரிசீலித்து வருகிறது.  நிறுவனத்தில் முதலீடு செய்யும் வகையில் வெளி முதலீட்டாளர்களுக்கும் அப்போலோ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள அப்போலோவின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி, ''எங்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாக வைத்துள்ளோம். தற்போது 78 சதவீதமாக உள்ள அடமான பங்குகளை 20 சதவீதமாக குறைக்க முயற்சித்து வருகிறோம். பல முதலீட்டாளர்கள் எங்களது நிறுவனத்தை சந்தித்து பேசி வருகிறார்கள்'' என்று தெரிவித்தார்.

தேவையான நிதியை திரட்ட இந்த மாத இறுதிக்குள் சில ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com