சிறையில் லஞ்ச புகார் - சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்

சிறையில் லஞ்ச புகார் - சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்
சிறையில் லஞ்ச புகார் - சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்

சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்துவருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்கள்.

மேலும் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் கடந்த மாதம் 11ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், நீதிபதி உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணை இன்னைக்கு ஒத்துக்கிவைத்தார்.

இதையடுத்து, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சம்மன் வழங்கிய நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அனிதா, தன்மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டாக்டர் அனிதாவிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 6 பேருக்கும் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறைத்துறை முன்னாள் அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ மகனூருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com