மா.சுப்ரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

மா.சுப்ரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

மா.சுப்ரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்
Published on

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலின்போது மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த வேட்புமனுவில், கிண்டி, தொழிலாளர் காலனியில் தன் மனைவி காஞ்சனாவுக்கு சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது பொய்யான தகவல் என்றும், எஸ்.கே.கண்ணன் என்பவர் இறந்த பிறகு அவரது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மா.சுப்ரமணியன் அபகரித்ததாக சைதை பார்த்திபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

அபகரித்த நிலத்தை மனைவியின் பெயருக்கு மா.சுப்ரமணியன் மாற்றியதாகவும், இந்த மோசடிக்கு சிட்கோ அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

எஸ்.கே.கண்ணன் உயிருடன் இருந்தபோதே நிலம் தன் மனைவியின் பெயருக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதாக மா.சுப்ரமணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் மூலம் நில அபகரிப்பு செய்துள்ளதால் மா.சுப்ரமணியன், காஞ்சனாவிற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியு‌ள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com