கும்பகோணம்: பத்து பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை

கும்பகோணம்: பத்து பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை
கும்பகோணம்: பத்து பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே இளைஞர் ஒருவர், பத்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை வேளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற ஹரிஹரனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சிலர் அழைத்ததாகவும், அவர்களின் பேச்சைக் கேட்டு வெளியே வந்த ஹரிஹரனை பத்து பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

உயிருக்கு பயந்து அவர்களிடம் ஹரி தப்பியபோது, விரட்டிச் சென்ற அந்தக் கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து அந்த கும்பலும் தப்பிவிட்டது. இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை காவல் நிலைய போலீசார் ஹரிஹரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com