நகைக்கடன் தள்ளுபடி - மீண்டும் ஒரு வாய்ப்பு

நகைக்கடன் தள்ளுபடி - மீண்டும் ஒரு வாய்ப்பு
நகைக்கடன் தள்ளுபடி - மீண்டும் ஒரு வாய்ப்பு

குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஐ. பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066(50%) பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தகவல் வெளிவந்தது. அதேசமயம் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையென கூறி நகைக்கடன்கள் தள்ளுபடி சலுகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்திருக்கிறார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com