சாத்தான்குளம் விவகாரத்தை விசாரிக்கும் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா

சாத்தான்குளம் விவகாரத்தை விசாரிக்கும் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா
சாத்தான்குளம் விவகாரத்தை விசாரிக்கும் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா

சாத்தான்குளம்  தந்தை மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்தனர்.

அவர்கள் தொடர்ந்து சாத்தான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து அதிகாரிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com