ஓணம் பண்டிகை: சென்னையில் ஒரு நாள் பொது விடுமுறை அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை: சென்னையில் ஒரு நாள் பொது விடுமுறை அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை: சென்னையில் ஒரு நாள் பொது விடுமுறை அறிவிப்பு.!
Published on

ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழி பேசும் கேரள மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை 10 நாட்கள் வண்ணப் பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் 2008ஆம் ஆண்டு முதல் ஓணம் பண்டிகையின் போது சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு ஈடாக செப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com