அண்ணாமலை பல்கலை. மாணவர் போராட்டம்: முதல்வர் தலையிட வீரமணி வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலை. மாணவர் போராட்டம்: முதல்வர் தலையிட வீரமணி வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலை. மாணவர் போராட்டம்: முதல்வர் தலையிட வீரமணி வலியுறுத்தல்
Published on

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா கல்லூரி ம‌ருத்துவ மாணவர் போராட்டத்தில், முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்‌துள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு வசம் கொண்டு வரப்பட்டது என்றும், ஆனால் கட்டணம் மட்டும் பழைய முறையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவர்களின் போராட்டம் சரிதான் என்றும், ஒரு மாத கால மாணவர், பெற்றோர் போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com