கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த குபேரன் கடந்த 20 ஆம் தேதி, கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் அண்ணாமலைநகர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.