“ஆளுநரை சீண்டிப்பார்ப்பது சரியல்ல; முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும்”- அண்ணாமலை

இல்லாத பிரச்சனைகளுக்கெல்லாம் ஆளுநர் தான் காரணம் என்ற வகையில் முதல்வரின் கடிதம் இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

கோவை விமானநிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்த்தார்.
அப்போது, குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்தார். 

“முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் எத்தனை பிரச்னைகள் உள்ளன, எத்தனை அதிருப்தி திமுக அரசின் மீது இருக்கிறது, செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனை இருக்கிறது, நிறைவேற்றவேண்டிய அவருடைய வாக்குறுதிகள் எத்தனை இருக்கிறது.... இதையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநர் அவர்களை சீண்டி பார்ப்பது என்பது சரியல்ல... " என்று பேசினார்.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதன் முழுவிவரத்தை, இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com