உள்ளாட்சித் தேர்தல்: பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக் கழகம்

உள்ளாட்சித் தேர்தல்: பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக் கழகம்
உள்ளாட்சித் தேர்தல்: பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக் கழகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. தேர்தல் நடைபெறும் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவையொட்டி நாளையும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அக்டோபர் 9 ஆம் தேதியும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம், வளாகக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com