விழுப்புரம்: தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம்; பட்டினியால் இறந்த சோகம்

விழுப்புரம்: தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம்; பட்டினியால் இறந்த சோகம்

விழுப்புரம்: தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம்; பட்டினியால் இறந்த சோகம்
Published on
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அச்சிறுவன் பட்டினியால் இறந்தபோனது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரத்தில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி காலை வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான் என நினைத்து, அக்கம்பக்கத்தினரிடம் கூறவே அனைவரும் அந்த சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில், அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்தனர். குழந்தையில் உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த குழந்தை உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்து இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com