பரிசுப்பெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

பரிசுப்பெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்
பரிசுப்பெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அமமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள ‘‌பரிசுப் பெட்டி’ சின்னம் மக்கள் மத்தியில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டபேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக அது வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என அமமுகவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, அக்கட்சி கேட்ட ‘குக்கர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘பரிசுப் பெட்டி’ சின்னம் அமமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அமமுகவிற்கு அளிக்கப்பட்டுள்ள பரிசுப்பெட்டி சின்னம் அதிமுகவுக்கு சவாலே கிடையாது. குக்கர் சின்னத்தில் மக்களை ஏமாற்றி ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தமிழகத்தில் மக்களை ஏமாற்றி வெற்றிபெறும் நிலை தொடராது. எனவே பரிசுப்பெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது. நோட்டாவுக்கு கீழ் செல்லாமல் இருந்தால் சரிதான். டிடிவியின் வேட்பாளர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்” என தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com