சென்னை: நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்!

சென்னை: நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்!
சென்னை: நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்!

முழு ஊரடங்கு நாளான நாளை வழக்கம் போல் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இன்று இரவு 10 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நாளை கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். நாளை முழு ஊரடங்கு நாள் என்பதால் சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களும் திறந்திருக்குமா? அம்மா உணவங்களுக்கு சாப்பிட வரமுடியுமா? என்ற கேள்வி எளிய மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் பசி போக்கும் அம்மா உணவகம் முழு ஊரடங்கிலும் செயல்பட்டால்தான் பலரின் பசி போகும் என்கிறார்கள் இதனை நம்பி உள்ளவர்கள்.

இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில் அம்மா உணவகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com