கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர்? அறநிலையத் துறை விளக்கம்!
கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். எம்எல்ஏ அன்பழகன் குளத்தை பார்வையிட்டு, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டன.
கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்த கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், குளத்தை பார்வையிட்டார். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குளத்தில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, மகாமகம் குளத்துக்கு அரசலாற்றில் இருந்துபோர்வெல் மூலம் வழக்கமாக தண்ணீர்கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.நீண்ட நாட்களுக்கு பின் அரசலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டதால், நீர்வழிப்பாதையில் இருந்த கழிவுகள் குளத்துக்கு வந்தடைந்ததாகவும், இப்போது வரும் நீர்சுத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

