"CM-வீடு உட்பட 8 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த போதை ஆசாமி!

முதல்வர் வீடு உட்பட 8 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக நீலகிரியில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணேசன்
கைது செய்யப்பட்ட கணேசன் file image

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், வயது (41). இவருக்குத் திருமணமாகி 5 மாதத்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கணேசன் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் மது போதையில் நாள்தோறும் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னை108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் பேசுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று இரவு108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு அழைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கணேசன்
நீலகிரி | "என்னை ஒன்றும் செய்ய முடியாது" மதுபோதையில் சிறுமிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்!

இதையடுத்து இந்த தொலைப்பேசி எண்ணை பார்த்த ஆம்புலன்ஸ் அவசர உதவி மையத்தினர் ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்ப முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சரின் இல்லம் உட்பட 8 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கணேசன்
கணேசன்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தினர், சென்னை தலைமை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து நீலகிரி மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வரும் கணேசன்தான் இச்செயலில் ஈடுபட்டது என்பதை அறிந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ விரைந்து சென்ற போலீசார் கணேசனைக் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணேசன் மதுபோதையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தனர்.

தமிழக முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட கணேசன்
முந்திரி காட்டில் மீட்கப்பட்ட ஆண் சடலம்... விசாரணையில் அம்பலமான திருமணத்தை மீறிய உறவு? ஷாக் பின்னணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com