சென்னையில் பதுக்கிவைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் பதுக்கிவைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னையில் பதுக்கிவைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமங்கலம் தங்கம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் தலைமையில் தங்கம் காலனியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 80 அட்டைப் பெட்டிகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உயர் ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மதுபாட்டில்களையும், வீட்டில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து, திருமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக காவல்துறையினரை கண்டதும் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகினர். அவர்களை தேடி பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com