ajith kumar spoke some emotional points after padma bhushan award
ajith kumar spoke some emotional points after padma bhushan awardPT

”நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபர் தான்” - அஜித் குமார் நெகிழ்ச்சி!

”நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபராக இருக்கிறேன்” என்று பத்ம பூஷண் விருது பெற்ற பின் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Published on

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்றது. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்குமார் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பத்ம பூஷண் விருது பெற்றது பற்றி அஜித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியவை, ”நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபராக இருக்கிறேன், இங்கு இருப்பது மற்றும் இந்த உணர்ச்சிகள் அனைத்தையும் அனுபவிப்பது மிகவும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

முதலில், நான் உணர்ச்சி பெருக்கில் இருந்தேன். இது போன்ற தருணங்கள் உங்களை ஊக்குவிபப்பவை என்று நான் நம்புகிறேன். குறைந்தபட்சம் உங்களுக்கு இது நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என உறுதியளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்து வந்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன். எனவே நான் எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன், எனது பணி நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க கவனம் செலுத்தி மேலும் முன்னேறுகிறேன்." என்றார்.

எந்த பட்டங்களையும் விரும்பாமல், தன்னடக்கமாக இருப்பது உங்கள் வெற்றிக்கு ஒரு காரணமா எனக் கேட்கப்பட, "நம் பெயருடன் சேர்க்கப்பட்ட பின்னொட்டுகளை நான் நம்பவில்லை. அஜித், ஏ. கே. என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். அது ஒரு வேலை. நான் தொழில் ரீதியாக ஒரு நடிகர், எனது பணிக்காக எனக்கு ஊதியம் கிடைக்கிறது. புகழும் அதிர்ஷ்டமும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் பலனே. கடந்த 33 ஆண்டுகளாக நான் செய்து வரும் வேலையை நேசிக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். நான் அதிகமாக சிந்திப்பதைத் தவிர்க்கிறேன், ஒரே நேரத்தில் பல விஷயங்களை திட்டமிடுவதில்லை, எனவே எனது மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்துகிறேன்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com