விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விமானப்படை வீரர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விமானப்படை வீரர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விமானப்படை வீரர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆத்தூர் அருகே இந்திய விமானப்படை வீரர் விஷமருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடுவலூர் ஊராட்சி, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு என்பவரின் மகன் சதீஷ்குமார் (30). இவருக்கு சுவேதா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமார் டெல்லியில் இந்திய விமானப் படை வீரராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த சதீஷ்குமார் வடசென்னிமலையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாக தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் ஊரக போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com