ஆவடி: மத்திய பாதுகாப்புத்துறை வளாகத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஆவடி: மத்திய பாதுகாப்புத்துறை வளாகத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஆவடி: மத்திய பாதுகாப்புத்துறை வளாகத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஆவடியில் உள்ள விமானப்படை வளாகத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான படை வளாகங்கள் உள்ளன. இந்த படை வளாகத்தில் உள்ள விமானப்படை பிரிவில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் விசுவகர்மா (23) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வழக்கம்போல இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர் இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து வளாகத்தில் உள்ள மற்ற வீரர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது ஆகாஷ் விசுவகர்மா தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த இன்சாட் வகை துப்பாக்கியால் தன்னைத் தானே நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விமான படை உயர் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

மேலும் ஆகாஷ் பணிபுரிந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உதவி ஆணையர் வெங்கடேசன் விமானப்படை அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். விமான படை வளாகத்தில் பணியில் இருந்த விமானப்படை வீரர் தற்கொலை செய்திருப்பதால், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உயர் அதிகாரிகளின் தொந்தரவு காரணமா, அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com