`பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’-பொன்னையன் சர்ச்சை பேச்சு

`பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’-பொன்னையன் சர்ச்சை பேச்சு

`பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’-பொன்னையன் சர்ச்சை பேச்சு
Published on

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மூலம் அம்பலப்படுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியுள்ளார்.

அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், `காவிரி நீர் பங்கீடு தமிழக்திற்கு வர பாஜக போர்க்கொடி பிடித்திருக்க வேண்டும். அதுதான் பாஜகவை வளர்க்கும்.

ஆனால் அதற்கு பதிலாக, பாஜகவினர் `அதிமுக பின்னுக்கு தள்ளப்படும்’ என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகிறார்கள். அதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்ற்னர். இதனால் அதிமுகவினர் எச்சரிக்கையாவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார். பொன்னையனின் பேச்சு, அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com