”அதிமுக பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழும்” - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

”அதிமுக பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழும்” - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
”அதிமுக பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழும்” - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது மீண்டும் உயிர்த்தெழும் என்று அதிமுக பொன்விழா ஆண்டு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

வருகின்ற 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர். “அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவை தொடங்கி, அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். அப்போது 40 லட்சம் உறுப்பினர்கள் இருந்த இந்த கட்சியை ஜெயலலிதா வழிநடத்தி 1.5 கோடி தொண்டர்களாக உயர்த்தி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்தினார்.



அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாத ஆலமரம். இருபது ஆண்டுகாலம் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக விளங்கியுள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட ஒரே கட்சியான அதிமுக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வரும். இந்த இக்கட்டான காலகட்டம் கடந்து போகும்

எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அதிமுகவினரிடையே உள்ளது. கோட்டை கொத்தளத்தில் அதிமுக கொடி பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதிமுக தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தோடு மக்கள் பணியாற்ற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com