வரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

வரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
வரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக வருகிற 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் வருகிற 28-ஆம் தேதி மீண்டும் பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில்  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com