அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் என பாஜகவின் கே.டி.ராகவன் பதில் அளித்திருந்தார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம். தேர்தல் வெற்றி, தோல்விகள் பொதுவாழ்வில் பொருட்டல்ல. மாறாக மக்கள் நலனே நமது குறிக்கோள்.

மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்தாலும் மக்களின் பேரன்பு தொடர்கிறது. தேர்தல் முடிவுகள் தொய்வை, மனச்சோர்வை ஏற்படுத்தி இருந்தாலும் பொதுவாழ்வு பயணம் வீறுநடை போடுகிறது. ஜெயலலிதாவின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதை தவிர, எந்த சிந்தனையும் நமக்கு ஏற்படத் தேவையில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com