அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் - இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் - இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் - இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக தலைமை கழக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், கட்சி அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான உத்தரவை வழங்கி இருப்பதாகவும் ஆதலால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவுன் தான் அதிமுக தலைமை அலுவல்கத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால், வழக்கை தீர விசாரித்ததற்குப் பிறகு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என கூறிய தலைமை நீதிபதி இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கின் எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com