அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் உறுதி செய்த கொங்கு மண்டலம்

அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் உறுதி செய்த கொங்கு மண்டலம்
அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் உறுதி செய்த கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு அதிகம் பெற்ற கட்சி என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது அதிமுக.

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. அதிலும், கோவை மாவட்டம் அதிமுகவை தீவிரமாக ஆதரிக்கும் மாவட்டமாகவே இருந்தது. கால் நூற்றாண்டு காலமாக நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும், அதிமுகவே அதிகளவு தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்போல வெல்வது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

கோவை மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில், 5 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் பெரும்பான்மையான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளதன் மூலமாக கொங்கு மண்டல மக்களிடம் அதிமுகவிற்கு உள்ள செல்வாக்கு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களில் திமுக செல்வாக்கு பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com