“அவர் அம்மாவின் டிரைவர் கிடையாது.. சசிகலாவுக்குதான்; இனி அப்படி சொன்னா வழக்கு போடுவேன்” - இபிஎஸ்

“நிச்சயமாக அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி தொடரும். தேர்தலில் பெரும் வெற்றி பெறும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொது குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொது செயலாளர் தேர்வை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தமிழ்நாடு முழுவதும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “நீதி, உண்மை, தர்மம் வென்றுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது. நிச்சயமாக அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி தொடரும். தேர்தலில் பெரும் வெற்றி பெறும்” என்றார். முழு காணொளியையும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com