அதிமுக பொதுக்குழு: தீர்மானங்கள் கிடையாது - ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் மட்டுமே!

அதிமுக பொதுக்குழு: தீர்மானங்கள் கிடையாது - ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் மட்டுமே!
அதிமுக பொதுக்குழு: தீர்மானங்கள் கிடையாது - ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் மட்டுமே!

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இன்றைய பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாது என்றும் “ஒற்றைத் தலைமை” குறித்து விவாதம் மட்டுமே நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முடிவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com