நாளை மறுநாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நாளை மறுநாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
நாளை மறுநாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.  

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு பொதுக்குழுவில் அதிமுக சார்பில் நீட் தேர்வு விலக்கு,  கச்சத்தீவு மீட்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு தீர்வு,  மீண்டும் ஆட்சியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு - பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் மற்றும் அதிமுகவின் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது

இதையும் படிக்கலாம்: ``மதவெறிப் பேச்சுகளை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்”- முரசொலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com