'ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள் என்று பேசவில்லை' - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

'ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள் என்று பேசவில்லை' - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
'ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள் என்று பேசவில்லை' - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தேச விரோதிகள் என்றோ, சமூக விரோதிகள் என்றோ தாம் பேசவில்லையென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து தான் பேரவையில் பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த பின்பும் சிலர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தனி தமிழ்நாடு கோரியும் போராடியதாக கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் அளித்ததன் அடிப்படையில் சட்டமன்றத்தில் விளக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கண்ட அதிமுகவுக்கு முதலமைச்சர் களங்கம் கற்பிப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய `உங்களில் ஒருவன்’ சுயசரிதை - விரைவில் முதல் பாகம் வெளியீடு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com