இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு நலச் செயலாளருமான அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அன்வர் ராஜா, கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.