தமிழ்நாடு
தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை: தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை: தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
கட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெய்லஸ், மெல்டன், விஜய், நவீன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நால்வரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காரை நகர் முகாமிற்கு அழைத்துச்சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் மத்திய மாநில அரசை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.