தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. 69 இடங்களில் நடைபெற்ற இச்சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம் மட்டுமன்றி 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தங்கமணிக்கு தொடர்புடைய நாமக்கல் உள்ளிட்ட 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com