ஹைட்ரோ கார்பன் .... மீண்டும் போராட்டம் ?

ஹைட்ரோ கார்பன் .... மீண்டும் போராட்டம் ?
ஹைட்ரோ கார்பன் .... மீண்டும் போராட்டம் ?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து வரும் 15ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என, நெடுவாசல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கர்நாடக மாநில நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்புந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நெடுவாசல், நல்லாண்டார் கொள்ளை, வடகாடு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே நெடுவாசலை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களில், கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கா‌ர்பன் திட்டம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com