டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம்  - கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம்  - கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம்  - கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி
Published on

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜாரான வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைக்கு, வழக்கறிஞர் ப.பா மோகன் மற்றும் பல்வேறு அமைப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ப.பா மோகன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்காருக்கும், பெரியாருக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றி என்றார்.

இந்த வழக்கில் கிடைத்த வெற்றி என்னை போன்ற வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் விழிம்புநிலை மனிதருக்கு சமநீதி உருவாக்க வேண்டும் என்பதில் இது ஒரு மயில் கல்லாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என்று கூறினார். மேலும் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு மாறாமல் விடுதலையான 5 பேரின் மீதும், சித்ரா சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com