சமையல் எண்ணெய்களில் கலப்படம்: மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சமையல் எண்ணெய்களில் கலப்படம்: மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
சமையல் எண்ணெய்களில் கலப்படம்: மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சமையல் எண்ணெய்களின் தரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அனைத்து எண்ணெய் தயாரிப்புகளிலும் கலப்படம் இருப்பது ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருப்பதாக கூறியுள்ளார். அதனால் எண்ணெய் தயாரிப்புகள் உட்கொள்வதற்கு தகுதியானதா என ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு அமைக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மத்திய மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com