“ரவீந்திரநாத் புதிய உறுப்பினர்; அதனால் விவசாய மசோதாவை ஆதரித்தார்”: அதிமுக எம்.பி

“ரவீந்திரநாத் புதிய உறுப்பினர்; அதனால் விவசாய மசோதாவை ஆதரித்தார்”: அதிமுக எம்.பி
“ரவீந்திரநாத் புதிய உறுப்பினர்; அதனால் விவசாய மசோதாவை ஆதரித்தார்”: அதிமுக எம்.பி

ஓ.பி. ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர் என்பதால் விவசாய மசோதாவை ஆதரித்து பேசினார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் மசோதாவில் உள்ள குறைகளை மாநிலங்களவையில் தெரிவித்தேன். குறைகளை தெரிவிப்பது எங்களுடைய உரிமை. புதிய உறுப்பினர் என்பதால் மக்களவையில் விவசாயிகள் மசோதாவை ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசினார். அதனால் நானும் அதை ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

மசோதாவில் சில அம்சங்களை எதிர்த்து விட்டு ஆதரிக்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஸ்டாலின் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதிமுக., பாஜக கூட்டணியில் இல்லை. பாஜகவின் திட்டங்கள் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com