\
‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ - ஆர்.பி.உதயகுமார்

‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ - ஆர்.பி.உதயகுமார்

‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ - ஆர்.பி.உதயகுமார்
Published on

திமுக போட்ட பொய் வழக்குகளால்தான் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்ததினம் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து மதுரை உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய அவர், ''திமுக போட்ட பொய் வழக்குகளால்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஆனால் தற்போது அந்த திமுகவுடன் கூட்டணி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்வேன்'' என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com