’அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள்’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

’அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள்’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

’அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள்’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை
Published on

அதிமுக தொண்டர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியாகவும் ஆற்றலுடனும் நடந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா வழியில் அமைதியாகவும், எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும், ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் பணிகள் நடக்கட்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வீதிகளில் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், கொரோனா கட்டுபாட்டு விதிகளை கட்டாயம் பின்பற்றவும் தொண்டர்களுக்கு அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளனர்.

திமுக மற்றும் அதிமுக சார்பில் அதன் தலைவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com