அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் முடிவை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே, அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் முதன் முதலாக திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாயத்தேவர், இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர சசிகலா தரப்பிற்கே உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் தரப்பினர் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.