செந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

செந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

செந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
Published on

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தமிழக தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். 

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் இன்று நடந்து வருகிறது. இதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தோட்டக் குறிச்சி வாக்குச்சாவடியை பார்வையிட, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று காலை வருவதாக இருந்தது.

அவரை வரவேற்க, திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே, 300 மீட்டர் தொலைவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ’நாங்கள் வாக்கு சாவடியில் இருந்து முந்நூறு மீட்டருக்கு வெளியேதான் நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?’’ என்று திமுகவினர் கேட்டனர்.

இதையடுத்து திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலை யில், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் வாகனம் மூலம் ஆட்களை கொண்டு வந்து வாக்களிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது அதிமுகவினர் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com