டீ கடையில் இதுவும் சாத்தியம்: அசத்தும் அடையாறு சிகாகோ!

டீ கடையில் இதுவும் சாத்தியம்: அசத்தும் அடையாறு சிகாகோ!
டீ கடையில் இதுவும் சாத்தியம்: அசத்தும் அடையாறு சிகாகோ!

எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான தேநீர் கடைகள் இயங்கிவருகின்றன. சென்னை அடையாறில் உள்ள ஒரு தேநீர் கடை மற்ற கடைகளில் இருந்து தனித்து நிற்கிறது. 

எட்டு மணி நேர வேலை, வருடம் இரண்டு முறை சம்பள உயர்வு, தீபாவளி, பொங்கல் என்றால் புத்தாடைகளுடன் போனஸ், வருடா வருடம் நட்சத்திர ஹோட்டலில் விருந்து மற்றும் இன்சென்டிவ். இவை கார்ப்பரேட், ஐ.டி கம்பெனிகளில் நிகழ்வது சாத்தியம், தேநீர் கடையில் சாத்தியமா என்றால் சந்தேகம் தான். ஆனால் சிகாகோ கடையில் சாத்தியம் என்கிறார்கள், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள். 

சென்னைக்கு பிழைக்க வந்து தேநீர் கடையில் வேலை ப‌ர்த்தபோது சந்தித்த துன்பங்களை தனது ஊழியர்கள் சந்திக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்ததாகவும் கடையின் உரிமையாளர் சுகுமாறன் தெரிவிக்கிறார். தனது தேநீர் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வீடு எடுத்து தங்க வைத்து, சிலருக்கு கடையும் வைத்து கொடுத்துள்ள சுகுமாரன் இன்று வரை வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்.

தற்போது சென்னையில் ஐந்து இடங்களில் இயங்கி வரும் சிகாகோ தேநீர் கடை, தனது சுவையால் மட்டுமின்றி, உழைப்பை மதித்து ஊக்குவிக்கும் உரிமையாளராலும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com