முதலில் முதல்வர் அடுத்து மத்திய அமைச்சர்... அசத்தும் வரலட்சுமி!

முதலில் முதல்வர் அடுத்து மத்திய அமைச்சர்... அசத்தும் வரலட்சுமி!

முதலில் முதல்வர் அடுத்து மத்திய அமைச்சர்... அசத்தும் வரலட்சுமி!
Published on

மாவட்டம்தோறும் மகிளா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகை வரலட்சுமி, தற்போது மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரியை சந்தித்துள்ளார்.

'சேவ் ஷக்தி' என்ற அமைப்பை தொடங்கியுள்ள சரத்குமார் மகள் வரலட்சுமி சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், பெண்கள் சம்பந்தமான வழக்குகளை 6 மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் விரைந்து நீதி வழங்க மகிளா நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள அவர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பி.பி.செளத்ரியைச் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், பெண்களுக்கெதிரான வழக்குகளில் நீதி வழங்க தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் வரலட்சுமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com