"எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.." - விக்னேஷ் சிவனை புகழ்ந்த நயன்தாரா!

’மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தால்தான், சானிடரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், நடிகை நயன்தாராவின் ஃபெமி-9 நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல், பாடல் என உற்சாகமாக தொடங்கிய நிகழ்ச்சியில், நயன்தாராவுடன் அவரது கணவர் விக்னேஷ் சிவன், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா, சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு அனைத்து பெண்களுக்கும் சென்றடையவில்லை என கூறினார். பெண்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்றும் நயன்தாரா தெரிவித்தார்.

நடிகை நயன்தாரா பேசியது குறித்து இந்த வீடியோக்களில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com