“சுர்ஜித்துக்காக நானும் காத்திருக்கிறேன்.. நம்பிக்கையோடு இருப்போம்” - சத்யராஜ் உருக்கம்

“சுர்ஜித்துக்காக நானும் காத்திருக்கிறேன்.. நம்பிக்கையோடு இருப்போம்” - சத்யராஜ் உருக்கம்
“சுர்ஜித்துக்காக நானும் காத்திருக்கிறேன்.. நம்பிக்கையோடு இருப்போம்” - சத்யராஜ் உருக்கம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்படும் என தானும் காத்திருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே குழந்தை 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, 88 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

தற்போது குழந்தையை மீட்பதற்கு அதிவேகமாக குழி தோண்டும் அதிநவீன இயந்திரன் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நிச்சயமாக மீட்கப்படும் என காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான நிகழ்வு. நிச்சயமாக அந்த குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையுடன் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com